Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

எட்டாத தூரத்தில் மில்லேனியம் வளர்ச்சி இலக்குகள்!

ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும் செலவை விட குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா பயணித்துள்ளது என்று மேடிசன் சதுக்கத்தில் தொடர்ச்சியான கைத்தட்டல்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி பேசிய பேச்சின் குதூகலத்தில் இருக்கும்போது, இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்காத ஒரு செய்தி வெளியானதை பலரும் கவனிக்க தவறியுள்ளனர்.

எதிரொலி!!!!

அப்பாவும் மகனும் காலாற மலையின் முதுகில் நடந்து கொண்டிருந்தனர். திடீரென்று மகன் கால் இடறி தரையில் விழுந்தான்.
“ஆ........அப்பா..............” காயம்பட்டு துடித்த சிறுவன் அலறினான்.

கதைகள் என்ன செய்துவிடும்!



நாம் குழந்தைகளுக்கு கதை சொல்கிறோம். அது என்ன கதையாகவும் இருக்கலாம், ஆனால் அந்தக் கதை குழந்தைகளிடம் என்ன செய்துவிடும், என்ன கொடுத்துவிடும்?
கதையின் முடிவில் நாம் கூறும் நீதி போதனை அல்லது கருத்து தான் குழந்தைகளின் மனதில் தங்கும், அதற்கு நேரடியாகவே கருத்தினை மட்டும் கூறிவிட்டு போய்விடலாமே, நேர விரையம் தானே எனலாம். குழந்தைகளுக்கு அந்த கருத்து மட்டும் செல்கிறது என்ற எண்ணம் முற்றிலும் தவறானது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 12,844 பேருக்கு கலர் போட்டோவுடன் வாக்காளர் அட்டை! தரேஸ்அகமது வழங்கினார்!


புதிய வாக்காளர்களுக்கு வண்ண புகைப்படத்துடன் கூடிய பிளாஸ்டிக் வாக்காளர் அடையாளஅட்டைகளை கலெக்டர் தரேஸ்அகமது வழங்கினார்.

திங்கள், 29 செப்டம்பர், 2014

ஆரோக்கியமான இருதய சூழலை உருவாக்குவோம்!

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது பற்றியும், இதய நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள், அவற்றைத் தவிர்க்கும் முறைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதற்காக, ‘உலக இதய தினம்’ ஆண்டுதோறும் ‘உலக இதய கூட்டமைப்பால்’ (World Health Federation) அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கர்கரே மனைவி மரணம்!

மாலேகான் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளின் பின்னணியை வெளிக்கொணர்ந்த மஹாராஷ்டிரா ஏ.எடி.எஸ் தலைவரும், மும்பை தாக்குதலில் மர்மமான முறையில் கொல்லப்பட்டவருமான ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதா கர்கரே மரணமடைந்தார்.

எதிர்ப்பு

எதிர்ப்பு 

அமெரிக்கா சென்றுள்ள மோடிக்கு, மேடிசன் சதுக்கத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு ஒருபுறம் நடந்த வேளையில், மறுபுறம் மோடியை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர்கள் நடத்திய நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோடிக்கு வரவேற்பு நடக்கும் மேடிசன் சதுக்கத்துக்கு வெளியே நீதி மற்றும் பொறுப்பிற்கான ஒருங்கிணைப்புக் கூட்டணி என்ற அமைப்பில் ஒன்று கூடியவர்கள் மோடிக்கு எதிராக போராட்டத்தை நடத்தினர்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தலையிட மாட்டேன்-நரேந்திர மோடி !

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தலையிட மாட்டேன். வழக்கை சட்டப்படி நடத்துங்கள்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு சரியானது என்று நினைக்கிறீர்களா?
இந்த வழக்கின் ஆரம்ப காலத்திலேயே தகுந்த உண்மை யான ஆதாரங்களை முன்வைத்து தான் மனு தாக்கல் செய்திருந்தேன். வழக்கில் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று ஆரம்பத்திலேயே தெரியும். தீர்ப்பு சரியானபடியே வந்துள்ளது. இது நான் எதிர்பார்த்த தீர்ப்புதான். ஆனால் கொஞ்சம் தாமதமாக வந்துள்ளது.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

விவிஐபி செல்லில் ஜெயலலிதா; கைதி எண். 7402


சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 23ஆம் செல்லில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட கைதி எண். 7402.

பெண்கள் சிறைக்கு அருகில் இவரது செல் இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு படுக்கை, மின்விசிறி மட்டும் தனி பாத்ரூம் வசதிகள் உண்டு. குற்றவாளிகளுக்கான வெள்ளை உடை அவருக்கும் அளிக்கப்பட்டது.

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும். இந்த  மாதத்தின் முதல் பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களைவிட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதும் மகத்தானதும் வேறு இல்லை.அந்த வரிசையில் ايام عشر ذي الحجة – என்னும் 

துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள்” 

மிகவும் முக்கியமான நாட்களாகும். ஆகவே இந்த நாட்களில் அதிகமாக நல்லமல்களை செய்ய ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். அல்லாஹ் سبحانه وتعالىதன் அடியார்களுக்கு அவர்களின் குறுகிய ஆயுளில் நிறைந்த நல்லமல்களைச் செய்து மகத்தான பேறுகளைப் பெறுவதற்காக சில முக்கிய நாட்களை வழங்கியிருப்பது மிகப்பெரிய கருணையாகும்.அந்த வரிசையில் துல்ஹஜ் மாதத்தின் முதல்  பத்து நாட்களை சிறப்பித்து  குர்ஆனிலும்

துல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்….
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ

பெரம்பலூரில் கடையடைப்பு , பேருந்துகள் நிறுத்தம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு


சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டதோடு, கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் பொதுமக்களும், வெளியூர் பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்துகிறீர்களா? பெற்றோர்களே உஷார்…


6 மாத குழந்தைகளுக்கு சளி, ஜலதோஷம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுவது சகஜம். ஆனால், இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது மூக்கடைத்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். அப்போது, நாம் அனைவரும் முதலில் கையில் எடுக்கும் மருந்து தைலம் தான்.

ஆனால், குழந்தைகளுக்கு இதை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

சனி, 27 செப்டம்பர், 2014

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ.100 கோடி அபராதம்: பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. சிறைத் தண்டனையுடன் ரூ.100 கோடி அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஜெயலலிதா தீர்ப்பு எதிரொலி: ட்விட்டரில் பொங்கிய ஆதங்கமும் ஆவேசமும்


18 ஆண்டு காலத்துக்கு பின்னர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், ட்விட்டரில் இந்த தீர்ப்பு குறித்து விவாதம் வலுத்ததால், இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் #Jayaverdict முதல் இடத்தை பிடித்தது.

ஊழல் தடுப்புச் சட்டம்: இந்திய அரசியல் வரலாற்றில் 'முதல்'வர் ஜெயலலிதா

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து முதல்வர் பதவியில் இருக்கும்போதே ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற நாட்டின் 'முதல்' முதல்வர் என்ற பெயரை எடுத்து சிறப்பு கவனம் பெற்றுள்ளார் ஜெயலலிதா.

வியாழன், 25 செப்டம்பர், 2014

ஆசிய விளையாட்டு: தலையில் ஹிஜாப் அணிந்து விளையாட கத்தார் பெண்கள் அணிக்கு அனுமதி மறுப்பு!

தென்கொரியாவின் இன்சியான் நகரில் 17–வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கத்தார் அணியும் பங்கேற்றுள்ளது.
இந்நிலையில், கத்தார் மற்றும் மங்கோலிய பெண்கள் அணிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி நடைபெற இருந்த போட்டியில் கலந்துகொள்ளும் கத்தார் வீராங்கனைகள் ஹிஜாபுடன் மைதானாத்துக்குள் நுழைந்தார்கள். ஆனால் சர்வதேச கூடைப்பந்து கழக (FIBA) விதிப்படி தலையில் முக்காடு (ஹிஜாப்) அணிந்து விளையாட நடுவர் தடை விதித்தார்.

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்கிறது!

2014-15ம் நிதியாண்டுக்கான மின் கட்டண உயர்வுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தமிழக மின் வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கான விவரங்களை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதற்கான தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள கட்டண விவரங்களில், ஆண்டுக்கு சுமார் 6,805 கோடி ரூபாய்க்கு மின் கட்டணத்தை உயர்த்த, தமிழக மின் வாரியம் திட்டமிட்டுள்ள விவரம் தெரிய வருகிறது.

செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட மங்கள்யான்! - முதல் முயற்சியிலேயே இந்தியா சாதனை!

செவ்வாய் கிரக ஈர்ப்பு பகுதிக்குள் நுழைந்த மங்கள்யான் விண்கலம், இன்று காலை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இணைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட‌ப் பாதைக்குள் முதல் முயற்சியிலேயே விண்கலத்தை செலுத்திய பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

புதன், 24 செப்டம்பர், 2014

நாளை நமதூரில் மாசக் கரண்ட் ...


சிந்தனை செய் மனமே ...


செப்டம்பர் மாத விடியல் வெள்ளியில் சிந்தனை செய் மனமே என்ற கட்டுரையில் இருந்து இணையத்தை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி சொல்லியதில் இருந்து  எடுக்கப்பட்ட செய்தி இது ஐந்தாயிரம் ரூபாய்க்கு சுமார்ட் போனும் ஐந்து ரூபாய்க்கு இண்டர்நெட்டும் கிடைக்கும் நமது நாட்டில் இன்று பெரும்பான்மையினர் இணையத்தோடு இணைந்துள்னர் ஏ.சி.அறையில் ஓசி இன்டர்நெட்டில் என்னை போன்றவர்கள் அமர்ந்துக் கொண்டு அனைவரையும் குறை சொல்ல வசதியாக உள்ளது .இணையத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை போராட்ட களத்தில் நிற்கும் மக்கள் நமக்கு படித்து தருகின்றனர் .சமிபத்தில் இஸ்ரேல் காசா மீது மிருக தனமான தாக்குதல்நடத்தியது இதன்

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

தவருக்கு வருந்திகிறோம் ....

பகிரங்க மன்னிப்பு நமது நிருபர்

நாம் வெளியிட்டுள்ள இறப்பு செய்தி தகவல் தரவாக இடம் பெற்றுள்ளது. இறந்த நபர் லிப்டில் மூச்சு தினரி இறந்ததாக நாம் வெளியிட்டுள்ளோம்.

நீருக்குள் பிரசம் ....

நீருக்குள் பிரசம் பார்ப்பத்து பயனுள்ள கண்டுபிடிப்பு, இதனால் குழந்தை நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறப்பதும், தாய்க்கு வலியை குறைப்பதுடன் கர்ப்பத்தில் குழந்தை நீரில் மிதப்பதால் இதை எளிமையாகவும் ஏற்றுக்கொள்கிறது,

மொபைல் திருடு

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? 
உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.

துபாயில் ஏற்பட்ட கடும் புழுதிக் காற்றும் நமது படிப்பினையும் !


 

 கடந்த சில தினங்களாக துபாய் நகரில் கடும் புழுதிக் காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

கூட்டு குர்பானி - நமதூர் தமுமுக


திங்கள், 22 செப்டம்பர், 2014

நமதூர் ஹஜ் பயணி மக்காவில் வபாத்தானார்!

நமதூர் ஜமாலிய நகர் மேற்கு மெயின் ரோடு மர்ஹூம் மொல்லா முஹம்மது உசேன் அவர்களின் மகன் ஹாஜி முஹம்மது காசிம் என்பவர் நேற்று (21/09/2014) ஞாயிற்றுக்கிழமை

ஊடகத்தில் நமது நிலை!

அல்லாஹ் கூறுகின்றான்:

“அவர்களை எதிர்ப்பதெற்கென நீங்கள் தயாராகி விட்டீர்களென்றால் முடிந்த அளவு எல்லா ஆற்றல்களையும் தயார் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மேலும், குதிரைப் படைகளையும் திரட்டிவையுங்கள்.

இவற்றின் மூலம் அல்லாஹ்வுக்கும், உங்களுக்கும் பகைவர்களாய் உள்ளவர்களையும் இவர்கள் அல்லாத வேறு பகைவர்களையும் நீங்கள் திகிலடையச் செய்திட வேண்டும்.” (அல்குர்ஆன்:8:60)
இன்றைய நாட்களில் உலக மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள மார்க்கம்
 இஸ்லாம். அதேபோல, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் முஸ்லிம்கள். இதற்கு முக்கியக்

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

உடலுக்குள் ஊடுருவி சிகிச்சை வழங்கும் குட்டி ரோபாட்! - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

மருத்துவ துறையில் சிகிச்சைக்காக ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது மனிதனின் உடலுக்குள் ஊடுருவி சிகிச்சை வழங்கும் வகையில் சிறிய ஸ்க்ரூ அளவேயுள்ள ரோபா ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

கறி தின்னு நாளாச்சும்மா…

” தாயும் சிறு வயது கொண்ட மகனும் கொண்ட ஏழை குடும்பம் அது. தந்தை இல்லை.
கும்பி எரியுது குடல் காயுது கொஞ்சம் மிளகோ உள்ளியோ இருந்தால் பழையதுக்கு தொட்டுக் கொள்ளாலாம் என்ற நிலையில் கழியும் அன்றாடப் பொழுதுகள். இந்த நிலையில் சிறுவனுக்கு அந்த ஆசை வந்தது. கறி தின்று எவ்வளவு நாள் ஆகி விட்டது.
அம்மாவிடம் சொன்னான். அம்மா நெக்குருகி நின்றாள். சுதாரித்தாள். சின்னஞ்சிறு மகனின் கறி ஆசையை நிறைவேற்றிட முனைந்தாள். துணிந்தாள்.
அன்றிலிருந்து சிறுக சிறுக சேர்த்தாள். ஒரு நாள்

ஒரு எட்டு போடுவோம்!

ஒரு குழந்தை தவழ்ந்து முடிந்து, எழுந்து நிற்க முயலும் போது தன் இருப்பு நிலையினை சமநிலை செய்ய முடியாததால் கீழே விழுவதும், பின் எழுவதுமான நிகழ்வு நடைபெறும்.
எதுவரை எனில் முழுவதுமான சமநிலையோடு (Balanced Walk) நடக்கத் துவங்கும் வரையிலும் இந்த முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கும்.
நாம் அனைவருமே இந்த முயற்சியில் வெற்றி பெற்றவர்கள்தான்.

மக்களை பாடாய்ப்படுத்தும் மூட்டைப்பூச்சிகள்!

பூச்சிகளால் எப்போதும் தொல்லைதான். அதிலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இத்தொல்லை அதிகம். ஆனால் சுத்தம், சுகாதாரத்துக்குப் பேர் போன்ற மேற்கத்திய நாடுகளில் பூச்சிகளின் தொல்லை குறைவாக இருக்கும் என்று நாம் எண்ணுவோம். நிஜத்தில் நிலைமை அப்படியில்லை என்பதை பிரான்ஸ் காட்டுகிறது.
அந்நாட்டில் வழக்கத்துக்கு அதிகமாக மூட்டைப்பூச்சிகள் நிறைந்துள்ளதாகவும், இதனால் அந்நாட்டு நகரங்களில் மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பரவி வரும்

சனி, 20 செப்டம்பர், 2014

தன்னம்பிக்கை ...

ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளுடன் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தேன். பரிச்சயமான கேம் தான். குறிப்பிட்ட ஒரு லெவல் சிக்கலாகிக் கொண்டிருந்தது.

கடத்த வந்தவரிடம் பாஸ்வேர்ட் (password) கேட்டு தப்பிய சிறுமி!

பெங்களூரில் 'little flower'என்கிற பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமியிடம் முன்பின் தெரியாத ஒரு நபர், உன்னை அழைத்துவரச் சொல்லி உன்னுடைய அம்மா என்னை அனுப்பி வைத்துள்ளார்.
வா போகலாம் என்று சொல்லி இருக்கிறார்.
உடனே அந்த சிறுமி , "password" சொல்லுங்கள் உங்களுடன் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறாள்...., (அதாவது முன்பின் தெரியாத யாராவது உன்னை

இந்தியாவுக்காக முஸ்லிம்கள் உயிரையே கொடுப்பார்கள்:நரேந்திரமோடி!

புதுடெல்லி: “இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் இந்தியாவுக்காக வாழ்ந்து,இந்தியாவுக்காக உயிர் கொடுப்பார்கள். அல் காய்தா இயக்கத்தின் பேச்சைக்கேட்டு அவர்கள் நடந்துகொள்ள மாட்டார்கள்’ என்று நரேந்திர மோடி கூறினார்.

காஸா போர்:இஸ்ரேலின் உறவுகளை கடுமையாக பாதித்துள்ளதாக சர்வேயில் தகவல்!

டெல்அவீவ்: இஸ்ரேல், காஸாவின் மீது நடத்திய தாக்குதல் வெளிநாட்டு உறவுகளை கடுமையாக பாதித்துள்ளதாக 45 இஸ்ரேலியர்களும் நம்புகின்றனர் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு நல்ல இடம் உள்ளது என்பதை 13 சதவீத இஸ்ரேலியர்கள் மட்டுமே நம்புகின்றனர்.அமைதியான நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சியுடன் மட்டுமே இஸ்

அண்ணா என்றொரு அறிஞர் பெருமகன்...


“எனக்கு வயது முப்பது. அறிஞர் அண்ணாவை பற்றி கேள்விப்பட்டிருந்தேன். எனினும் அவரது வரலாறை அறிந்து இருக்கவில்லை. அதற்கான ஆவல் கொண்டிருந்த நிலையில் இந்த வலைதளத்தை கண்டேன். பேருவகை கொண்டேன். அவரது சீரிய வரலாறை படித்தேன் என்பதை விட அள்ளி அள்ளிப் பருகினேன் என்பதே பொருத்தமாக இருக்கும். திராவிட இயக்கத்தின் அந்த முன்னோடி நாயகனை தமிழ்நாடு தந்த திருமகனை இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டுமே என ஏங்கினேன். இனி அவரது நூல்களையும் படிக்க எண்ணியுள்ளேன். இந்த வாய்ப்பை நல்கிய தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல.”

சாக்‌ஷி மகராஜிற்கு முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் சவால்!

புதுடெல்லி: மதரசாக்களில் தீவிரவாத பயிற்றுவிக்கப்படுவதாகவும், அவை தீவிரவாதத்தின் மையங்களாக செயல்படுவதாகவும் அவதூறாக குற்றம் சாட்டிய பா.ஜ.க எம்.பி சாக்‌ஷி மகராஜிற்கு மவ்லானா ஸய்யித் அக்த்ர் அலி தலைமையிலான மார்க்க அறிஞர்களின் குழு சவால் விடுத்துள்ளது.

வியாழன், 18 செப்டம்பர், 2014

ஹாஜிகளுக்கான சேவையில் இந்தியா பிரடர்னிடி ஃபோரம்!

சவுதியில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு நலப்பணிகள், விழிப்புணர்வு முகாம்கள் என பல தளங்களில் தன்னார்வ தொண்டு பணிகளை இந்தியா பிரடர்னிடி போரம் (IFF) செய்து வருகின்றது.

தூக்கத்திலும் மனித மூளை விழிப்புடன் இயங்குகிறது!

மனிதர்கள் தூங்கும்போதும் அவர்களின் மூளை தொடர்ந்து விழிப்புடன் இயங்குகிறது என்று தெரிவித்திருக்கும் விஞ்ஞானிகள், வார்த்தைகளின் பொருள் புரிந்து அதற்கேற்ற செயல்களை செய்விக்கும் அளவுக்கு மனித மூளை, மனிதர்கள் தூங்கும்போதும் விழிப்புடன் செயல்படுகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள்.

சர்க்கரையின் அளவை பாதியாக குறைக்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை!

நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையின் ஒரு நாளைக்கு சுமார் 15 கிராமாக குறைக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
இதனை ஊக்குவிக்க அரசுகள் சர்க்கரை வரி என்கிற புதிய வரியை விதிக்கலாம் என்றும் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

கஷ்மீரில் வெள்ள நீரால் நோய் பரவும் அபாயம்!

கஷ்மீர் மாநிலத்தில் கடும் மழையால் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தால் தற்போது நீர் மூலம் பரவும் நோய்கள் பரவக்கூடும் என்றும் அதனை சமாளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கஷ்மீர் மாநிலத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10 லட்சம் குழந்தைகள் அடுத்த 24 மணி நேரத்தில் இறந்துவிடுவதாக ஐ.நா. அதிர்ச்சி!

சிரியாவில் தங்கள் மீது தாக்குதல் நடத்திய அந்நாட்டு போர் விமானம் ஒன்றை ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாக அங்குள்ள ஐ.நா. கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இதில் விமானம் நொறுங்கி வீட்டின் மீது விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
சிரியா ராணுவம் செவ்வாய் அன்று, ஐ.எஸ் படைகள் இருக்கும் நகரங்களில் 5 முறை தாக்குதல் நடத்தியது. இது போல

சேது சமுத்திரத் திட்டத்தை ஒழித்துக்கட்ட மோடி அரசு முடிவு?

தமிழகத்தின் கனவுத்திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தைஎந்தவிதத்திலும் நிறைவேற்றுவதில்லை என்று நரேந்திரமோடி அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.“ராமர் பாலத்தை தகர்ப்பது என்றபேச்சுக்கே இடமில்லை” என்றுதிங்களன்று தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதன்மூலமாக, மத்தியகப்பல் போக்குவரத்து அமைச்சர்நிதின்கட்காரி இதை உறுதிப்படுத்தினார்.

பெரம்பலூரில் 8 வீடுகள் எரிந்து சாம்பல். பல லட்சம் பொருள்கள் நாசம்...


பெரம்பலூர் திருநகரில் புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து சாம்பலாயின.

திருநகரில் புதன்கிழமை மாலை சின்னையன் மகன் தங்கபாண்டியின் குடிசை வீட்டில் தீப்பிடித்தது. தொடர்ந்து, தீ பரவியதில் அருகிலிருந்த தங்கபாண்டி மகன் காளை, ஞானசேகரன் மகன் தம்புராஜ், அங்கமுத்து மகன்கள்

புதன், 17 செப்டம்பர், 2014

இவர் யார் என்று தெரியுமா?


இவர் யார் என்று தெரியுமா?

சகோதரர்களே, இவர்தான் ''ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்'' 
உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் இவருக்கு தான் முதல் இடம்..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு

11-ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவிகள் மெüலானா ஆசாத் கல்வி உதவித்தொகை பெற செப். 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்வியில் சிறந்து விளங்கி, வசதியின்றி கல்வியை தொடர இயலாத சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு உதவிடும் வகையில், மெüலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 15 செப்டம்பர், 2014

அக்னிப்பரீட்சை - பி.ஜெ பேட்டி

இதற்கு தலைப்பு எழுத மனம் வரவில்லை ...

தேவை மதவேறுபாடா.. மனமாற்றாமா.. சகோ. பூந்தை ஹாஜா..

தேவை மதவேறுபாடா.. மனமாற்றாமா.. சகோ. பூந்தை ஹாஜா..

இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் முஸ்லீம் மக்கள் பல கருத்துவேறுபாடுகளுடன் குழப்பங்கள் நிறைந்து இஸ்லாம் மார்க்கத்தில் உள்ளவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் சித்தன்போக்கு சிவன்போக்கு என்பது போல் என்ன நடந்தாலும் அவர்கள் வழிகள் வாழ்ந்து

சனி, 13 செப்டம்பர், 2014

மூன்று சோம்பேறிகளும் ஒரு வழிப்போக்கனும்

ஒரு பழைய கிராமம். அதில் ஒரு கல்மண்டபம். அங்கே எப்போதும் மூன்று சோம்பேறிகள் உட்கார்ந்துகொண்டு வழிப்போக்கர்களை வம்புக்கிழுத்து நேரத்தைப் போக்கடித்துக் கொண்டிருப்பார்கள். ஒருநாள் அந்த வழியே ஒரு வெளியூர்க்காரர் வந்தார். சோம்பேறிகள் வழக்கம்போல் பேச்சு கொடுக்கத் தொடங்கினார்கள்.
ஒரு சோம்பேறி சொன்னான், “நேரம் போகவேண்டுமல்லவா. நமக்குள் ஒரு பந்தயம் வைத்துகொள்வோம். ஆளுக்கொரு கதை சொல்ல வேண்டும். அதை மற்றவர்கள் நம்ப வேண்டும். நம்பாவிட்டால் கதை கேட்டவர் கதை சொன்னவருக்கு அடிமை. சரிதானே ?”