Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

விசுவரூபம் எடுத்த வார்டு உறுப்பினர்களும் , சிலையாய் நின்ற தலைவரும்...




இனி பேரூராட்சி அதிகாரம் செயல் அலுவருக்கே
ஆத்திரம் அதிகமாகும்போது அறிவு மழுங்கி விடுவது இயற்கை. இதற்கு உதாரணமாக  பணை மரத்தில் பரவசமாகக்  பறந்து திறிந்த பச்சகிளி பாம்பு பொந்துக்குள் விழுந்தது போல , அது என்னதான் பாசாங்கு காட்டினாலும் , படமெடுக்கும் பாம்பிடம் பாசத்தை எதிர்பார்க்க முடியாது என்பதுதான் எதார்த்தமான உண்மை. இந்த நிகழ்வு போலதான் இன்று நமதூர் பேரூராச்சியின் ( அரசியல் )  நிலவரமும்.

பேரூராட்சி தலைவராக கடந்த நான்கு ஆண்டுகளாக அழகு பார்த்த இந்த கவுன்சிலர்கள் , தற்போது கடந்த மூன்று மாதமாக பேரூராட்ச்சி தலைவருக்கு எதிரான நடந்த சம்பவத்தை  வார்டு உருப்பினர்களின் அனுகுமுறை மூலம் தெளிவுபடுகிறது.

இல்லையெனில் , மேற்கு ஜமாத்தின் ஆதரவோடு வெற்றி பெற்ற தலைவரை இந்த கவுன்சிலர்கள் குறிப்பாக மேற்கு பகுதியில் உள்ள கவுன்சிலர்கள் மேற்கு ஜமாத்திற்கு உள்ள செல்வாக்கை புறம் தள்ளி விட்டு இத்தகைய சூழ்ச்சியும் , துரோகமும் செய்யத் துணிவார்களா ?

அப்படியே , இவர்கள் கூறும் குற்றச்சாட்டுள் உண்மை ஏனெனில் இதை ஏன் ஆரம்பத்திலேயே செய்ய வில்லை. இப்போது செய்தால் மட்டும் தீர்ந்துவிடக்கூடிய காரியமா பேரூராட்சியின் நிலை !

இப்படி பட்ட பல என்னங்களும் மனக்குமுறல்களும் நமதூர் மக்களின் செவிக்கெட்டாத சிந்தனையாக உள்ளன.

குறிப்பாக பாமர மக்களின் தற்போதைய நிலைதான், இன்று இருதலை 
கொள்ளி எரும்பு போல உள்ளது. 




  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக