Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 2 மார்ச், 2016

நமதூர் அருகே எலி மருந்து பிஸ்கட்டை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் மயக்கம்...



லப்பைக்குடிகாடு அருகே  திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்லக்கருப்பன் மகன் ஸ்ரீகாந்த் (13), ராஜேந்திரன் மகன் கபில்தேவன் (15), விஜயன் மகன் கிள்ளிவழகன் (14) மற்றும் ராஜேந்திரன் மகன் காமராஜ் (12) ஆகிய 4 மாணவர்களும், பெரம்பலூர் புறநகரான துறைமங்கலத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இதில், ஸ்ரீகாந்த், கபில்தேவன், கிள்ளிவழகன் ஆகியோர் 8-ம் வகுப்பும், காமராஜ் 6-ம் வகுப்பும் படித்து
வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தும் அவர்கள் கேட்கவில்லையாம். இதனால் மனமுடைந்த 4 மாணவர்களும் திங்கள்கிழமை எலி மருந்து பிஸ்கட்டை உட்கொண்டனராம்.  இதனால், விடுதியில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்ட மாணவர்கள் நால்வரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக