Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 19 மார்ச், 2016

அமீரகம் வந்து ஏமாற்றம் அடைந்த வாலிபர்களை மீட்டு இந்தியாவிற்கு அனுப்பிய இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி.




வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி தனியார் நிறுவனங்களை
நம்பி அமீரகம் வந்து ஏமாற்றம் அடைந்த வாலிபர்களை மீட்டு இந்தியாவிற்கு அனுப்பிய இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி.

வளைகுடா போன்ற நாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி இந்தியாவிலிருந்து ஜார்கண்ட், கர்நாடகா, உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட வாலிபர்களை அமீரகத்தின் துபாய்க்கு ஒரு மாத விசிட் விசாவில் அழைத்து வந்துள்ளது இந்தியாவில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனம்.

விசா காலம் முடிவதற்குள் வேலை வாங்கி கொடுக்காமல் தாய்நாடு திரும்புவதற்கும் (விசிட் விசா காலக்கெடு முடிவதற்குள் ) வழி வகை ஏதும் செய்யாமல் கடந்த மூன்று மாத காலமாக வாலிபர்களுக்கு ஒரு நாளுக்கு ஒரு வேளை மட்டும் உணவு வழங்கி Al Quoz ல் உள்ள ஒரு ரூமில் அடைத்துள்ளனர். என்ன செய்வது என்று தெரியாது பல கஷ்டங்களையும் துன்பங்களையும் இன்னல்களையும் சந்தித்த வாலிபர்கள் பல நபர்களுக்கு, பல அமைப்புகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் யாரும் சரியான நடவடிக்கை எடுக்க முனையாததையடுத்து இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் தமிழ்மாநில அறிவுறுத்தலின் பேரில் துபை மண்டல நிர்வாகிகளின் கவனத்திற்கு வர பல்வேறு முயற்சிகள் எடுத்து வாலிபர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தாயகம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு 10 க்கும் மேற்பட்ட வாலிபர்களையும் 15/03/2016 அன்று துபாய் விமான நிலையத்தில் இந்தியன் கல்ச்சுரல் சொசயிட்டியின் துபை மண்டல நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர் கனி அவர்கள் இந்தியாவிற்கு வழியனுப்பி வைத்தனர்.



மின்னஞ்சல் மூலமாக
SDPI LBK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக